Wednesday, March 4, 2009

யார் யார் சிவம்? நீ நான் சிவம் பகுதி 2

கடவுளை பற்றி சொல்லி கொண்டிருந்தேன் அல்லவா? சரி உலகையே ஆட்டி
படைக்கும் கடவுளின் இருப்பிடமான கோவிலை பராமரிக்க 100 வேலையாட்கள் தேவை.....தன்னை தானே காத்துக்கொள்ள முடியாத கடவுள் உலகத்தை எப்படி காக்கும்?

கடவுள் இருப்பதாக நீங்கள் நம்புவதற்கு காரணம் புராணங்கள் தான். புராணம் என்றாலே கதைகள் என்று தான் சமஸ்கிரத்தில் பொருள். கடவுள் இருப்பதை உறுதிப்படுத்தும் கீதை, குரான், பைபிள், போன்ற நூல்கள் வனத்தில் இருந்து குதித்தனவா? இல்லையே ! அவைகளும் சாதாரன மனிதர்களால் தானே இயற்றப்பட்டன!

இன்று திருப்பதியில் ஒரு நாளுக்கு சுமார் 5 கோடி வருமானம் உண்டியல் முலமாக வருகின்றது. இந்தியாவில் உள்ள அனைத்து கோவில்களின் ஒரு நாள் வருமானத்தை கணக்கிட்டால் மயக்கமே வரும். அந்த பணம் யாருடையது? வெறும் கோடீஸ்வரர்கள் உடையாத? இல்லையே அதில் பாதி நம்மை போன்ற சாமானிய மக்கள் உடையது தான்.

இன்று கடவுள் தங்க வீட்டில் குளிர் சாதன அறையில் இருந்து கொண்டிருக்கிறார். ஆனால் அவர் காக்கவேண்டிய மக்களோ ஒரு வேலை உணவின்றி கடும் வெயிலிலும் மழையிலும் தவித்து கொண்டிருக்கின்றனர். கடவுள் உங்கள்ளுக்கு நிறைய செய்துகிட்டார் அல்லவா? நான் கடவுள் இல்லை என்று சொல்ல வரவில்லை. கடவுள்ளுக்காக நீங்கள் செய்யும் தேவையற்ற மூட பழக்கங்களை நிறுத்திகொள்ளுங்கள் என்று தான் சொல்கிறேன்.

நான் ஆத்திகன் இல்லை நான் பார்ப்பதை மட்டும் நம்புபவன் இதை ஆங்கிலத்தில் அக்நோச்டிசம் (agnostism) என்று கூறுவார்கள். என் நண்பன் ஒருவன் தேர்வு அறையில் பல சாமி படங்களை வைத்துக்கொண்டு பூஜை செய்து கொண்டிருந்தான். நான் ஒய் அவனிடம் என்ன செய்கிறாய் என்று கேட்டான் அகன் " நான் பரிட்சையில் தேர்வு பெற இறைவனை வேண்டிகொண்டிருக்கிறேன்" என்றான். தேர்வு ஆரம்பித்தது வினாத்தாள் மிகவும் கடினம். அவன் தேர்வில் தேர்வு பெறவில்லை. கடவுள் அவனை கைவிட்டுவிட்டரா? இல்லை....அவன் தேர்வுக்கு கடவுளை நம்பாமல் அவனை நம்பி இருந்தால் அவன் தேர்வு பெற்றுஇருப்பான்.

உன்னை நம்பு நீ வெற்றி பெறுவாய் . உன்னை நம்பினால் நீ கடவுளை நம்புவதற்கு சமம். ஏன்? "யார் யார் சிவம்? நீ நான் சிவம்"

No comments:

Post a Comment