Monday, March 2, 2009

இந்திய சினிமாவின் இன்றைய நிலை

தமிழ் மக்களளுக்கு ஸ்ரீராமின் இனிய வணக்கங்கள்.

தமிழ் சினிமாவை பற்றி பேசும் அதிகாரம் என்னிடம் இல்லை என்றாலும் ஒரு தமிழ் குடிமகன் என்ற உரிமை என்னிடம் நிறையவே உள்ளது. முதலில் இந்திய சினிமா நல்ல முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது என்பதை நான் ஒத்துக்கொள்ளவேண்டும். குறிப்பாக ஹிந்தி திரை படங்கள் சில மிகவும் சிறப்பாக சிரத்தையுடன் எடுக்க பட்டுள்ளன.

சென்ற வருடம் வெளியான "தாரே சம்மீன் பர்" (Taare zammen par ) , மற்றும் அதற்க்கு முந்தைய வருடங்களில் வெளியான "Black", "Rang De Basanthi" pondra திரைப்படங்கள் நெஞ்கை தொடுவான போல இருந்தன.

ஆனாலும் இந்திய சினிமாவின் சில பெரிய நடிகர்களால் நாம் இன்றும் பின்னோக்கி தான் சென்றுகொண்டிருக்கிரோம். குறிப்பாக தமிழ் திரைப்படங்களின் தரம் குறைந்து கொண்டே வருகின்றது . சென்ற வருடம் வெளிவந்த படங்களில் "வாரணம் ஆயிரம்", "சுப்ரமணியபுரம்" போன்ற படங்கள் மட்டுமே சொல்லும்படி அமைந்தன. சற்று வெளிபடையாக சொல்ல வேண்டும் என்றால் "விஜய்", "விஷால்" போன்ற நடிகர்களால் தான் இந்த நிலை ஏற்பட்டு இருக்கின்றது என்றே கூறலாம்.

தமிழ் சினிமாவின் முதன்மை நாயகனாக வலம் வரும் விஜய் நடித்து வெளி வந்த "குருவி", "வில்லு" போன்ற படங்கள் மிக கேவலமாக இருந்தன. சற்றும் எதார்த்தம் இல்லாமல் ஒரு பாமரன் எடுத்த படம் போல இருந்தன. தமிழ் சினிமாவின் மீது அக்கறை இருந்திருந்தால் நடிகர் விஜய் இது போன்ற படங்களில் நடித்து இருக்க மாட்டார் . ஒரு பாலத்தில் இருந்து பறந்து சென்று புகைவண்டியை பிடிப்பது என்பது எல்லாம் இளைஞர்கள் மனதில் ஒரு தப்பான என்னத்தை உண்டாக்கும் .

ஆகவே சற்றும் எதார்த்தம் இல்லாத கழட்ட சினிமா கலாச்சாரத்தை நாம் கைவிடவேண்டும். அது நமக்கு எந்த நம்மையையும் செய்ய போவது இல்லை. ஒரு திரைப்படம் பதல் அது நமக்கு ஏதேனும் ஒரு கருத்தை சொல்ல வேண்டும். வெறும் ஆடி பாடி கூத்தடிக்கும் சினிமாவை இனிமேலும் வளர்க்கக்கூடாது. அது நாம் நாட்டை தவறான முறையில் வெளிப்படுத்துவது மட்டும் அல்லாமல் நம் அடுத்த தலைமுறையினரையும் நாம் செய்த தவறை செய்ய வைக்கும்.

அதை புரிந்து இன்றைய இளம் நடிகர்களும் நடிகைகளும் ஒழுங்கான எதார்த்தமான சினிமாவை வளர்க்க வேண்டும்.

No comments:

Post a Comment